மணலி ஏரியை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு!
சென்னை,ஏப்.25- சென்னை மாநகராட்சி, மணலி யில் உள்ள 29 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை புனரமைக்க உள்ளது. வட சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளம் வராமல் தடுக்க ஆசிய வளர்ச்சி வங்கியின் திட்டத்தின் கீழ் இது நடக்கிறது. மணலி நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஏரிக்கு, கொசஸ்தலையாறு மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் வருகிறது. மேலும் மழை நீரும் சேர்கிறது. மழைக்காலங்க ளில் ஏரி நிரம்பி, நெடுஞ்சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது. ஏரியின் சுற்றளவு 1,787 மீட்டர். ஏரியை 0.5 மீட்டர் ஆழத்திற்கு தூர் வார திட்டமிடப்பட்டுள்ளது. ஏரிக்கரை கள் 4 மீட்டர் வரை பலப்படுத்தப் படும் இது தொடர்பாக துணை மேயர் மகேஷ் குமார் கூறுகையில், “ஏரிக்கரைகள் 4 மீட்டர் வரை பலப்படுத்தப்படும். பாதுகாப்பிற் காக சுற்றுச்சுவர் மற்றும் சங்கிலி இணைப்பு வேலி அமைக்கப்படும். தற்போது தூர் வாரும் பணி நடந்து வருகிறது. பிறகு, மாநகராட்சி நடை பாதை அமைத்து, மரங்களை நட்டு, கழிப்பறைகள் கட்டும். இதனால் ஏரி பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஆக்கிரமிப்புகளும் தடுக்கப் படும்” என்றார். இந்த திட்டம், ADB நிதியுதவி யுடன் கூடிய 3ஆயிரம் கோடி ரூபாய் கொசஸ்தலையாறு வடிநில மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதி யாகும். மணலி பகுதி மக்கள், ஏரி களுக்கு இடையே உள்ள தொடர்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாத்தூர், மணலி, கடப்பாக்கம் மற்றும் சத்தங்காடு ஏரிகளை இணைக்க வேண்டும் என்கின்றனர். கொசஸ்தலையாறு ஆற்றில் இருந்து ஒரு நொடிக்கு 40,000 கன அடி தண்ணீர் வந்தாலும், அதை ஏரிகளால் சேமிக்க முடியாது. நீர் வளத்துறை, 400 ஏக்கர் பரப்பள வுள்ள ரெட்டேரி ஏரியை சென்னை யின் ஐந்தாவது நீர்த்தேக்கமாக மாற்றுகிறது. அதேபோல், 80 ஏக்கர் பரப்பளவுள்ள சத்தங்காடு ஏரியை சூழலியல் பூங்காவாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து வரு கின்றனர்.
சிறு கனிமங்கள் சுரங்கத்திற்கு டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை
கோவை, ஏப். 25- கல் சுரங்கங்களில் இருந்து சிறு கனிமங்களை எடுப்பதற்கு கணினி மய ஸ்லிப்புகள் வழங்கவும், டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்த வும் தமிழ்நாடு அரசுக்கு விவசாயி கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சட்ட விரோத குவாரி தடுப்புக் குழு தமிழ்நாடு முதல மைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளது. இந்த மனுவில், “கல் குவாரி களில் முறைகேடாக சுரங்கம் எடுப்பதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தப் பட்டு ள்ளது. இந்த கூட்டு இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் கே. சிவப்பிரகாஷ் கூறு கையில்,”கல் சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் சிறு கனிமங்களை அள விட மெட்ரிக் முறையை அமல்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். இது கனிமங்கள் கொள்ளை யடிப்பதை தடுக்க உதவும் என்று கூறினார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சுரங்கங்களைச் சுற்றி சிசிடிவி கேம ராக் களை நிறுவி செயல்பாடுகளை கண் காணிக்க வேண்டும்” என அவர் கூறினார்.