பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
சென்னை,ஜூன் 13 சென்னை வண்டலூரில் உள்ள கிரெசண்ட் தொழில்நிலைய ஒத்துழைப்பு அமைப்பு இயந்திரவியல், சிவில் (பிளம்பிங்) மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை கிரசெண்ட் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 15 ஆம் தேதி நடத்தவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற வுள்ள இந்த முகாமில் 2017-2018 ஆம் ஆண்டுகளில் மேற்கண்ட படிப்புகளை முடித்த கிரெசண்ட் பல்கலைக் கழக மாணவர்களும் 2019 ஆம் ஆண்டில் முடித்த இதர கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். பிஇ,எம்.இ,பிடெக், எம்.டெக், டிப்ளமோ (இயந்திரவியல், எலெட்ரிக்கல், சிவில்) எம்பிஏ,ஐடிஐ,10வது படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்புமுகாமில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள். சுமார் 40 நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளை வழங்க உள்ளன. விருப்ப முள்ள மாணவர்கள் தங்களது பெயரை www.mepjobfair.com அல்லது www.crescent.education வலைதளங்களில் இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு டாக்டர் கணேஷ், இயக்குநர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, தொழில் நிலைய ஒத்துழைப்பு பிரிவு (ஐஐபிசி) தொடர்பு கொள்ளலாம். E-mail : placement @crescent.education / directortpc@crescent.education.
5 ரவுடிகள் கைது
பெரம்பூர்,ஜூன் 13 புளியந்தோப்பு கே.எம். கார்டனை சேர்ந்தவர் நவீன்குமார், ஏ.சி. மெக்கானிக். புதனன்று இரவு நவீன்குமார் புளியந்தோப்பு சிவராஜ் சாலையில் நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதனால் அவருக்கும் காரில் இருந்தவர்க ளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரில் இருந்த 5 பேர் நவீன் குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 10 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். அதிலிருந்த ஒருவர் ‘நான் தான் ரவுடி ஜங்கிலி கணேஷ், பல கொள்ளை, கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன். போலீசில் புகார் செய்தால் வீட்டுக்கே வந்து கொலை செய்வோன்’ என்று மிரட்டினார். உடன் இருந்தவர்களும் மிரட்டினார்கள். இது குறித்து நவீன்குமார் புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தார்.ஆய்வாளர் ரவி வழக்குப்பதிவு செய்து, கத்தி முனையில் பணம் பறித்தவர்களை தேடி வந்தார். இந்த நிலையில் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் ஜங்கிலி கணேசும், அவரது கூட்டாளிகளும் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி அங்கு சென்று துப்பாக்கி முனையில் 5 பேரையும் மடக்கி பிடித்தார். ஜங்கிலி கணேசுடன் இருந்த வர்கள் வியாசர்பாடி சூர்யா, சூளை குமார், செந்தில், கொளத்தூர் பாலமுருகன் என்பது தெரியவந்தது. இந்த ரவுடி கும்பல் குடியாத்தத்தை சேர்ந்த தொழில் அதிபர் பத்மநாபன் என்பவரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. பின்னர் இவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் தொடர்பு திட்டமுகாம்
திருவள்ளூர், ஜூன் 13 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஜூன் 26 அன்று காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெற உள்ளது. அது சமயம், அனைத்துத்துறை மாவட்ட அளவிலான முதல்நிலை அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுக்களாக அளிக்கலாம். இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சரக்கு ரயில் தடம்புரண்டது
ராயபுரம், ஜூன். 13- தண்டையார்பேட்டை ரயில்வே யார்டில் இருந்து, மதுரைக்கு வியாழனன்று (ஜூன் 13) அதிகாலை 4.30 மணிக்கு சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. கொருக்கு ப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்த போது இந்த சரக்கு ரெயில் திடீரென்று தடம் புரண்டது.இதனால் அந்த வழியில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து டில்லி புறப்பட்ட விரைவு ரயில் நிறுத்தப் பட்டது. டில்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. சென்டி ரலில் இருந்து கும்மி டிப்பூண்டி செல்லும் புறநகர் மின்சார ரயில் களும், அங்கிருந்துசென்னை சென்டிரல் வரும் மின்சார ரயில் களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.