tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

முறைசாரா சங்க கிளை உதயம்
சென்னை, ஜூன் 15 - சென்னை மற்றும் புறநகர் முறைசாரா சங்க கிளை சோழிங்க நல்லூர் பகுதி, ஜல்லடையான் பேட்டையில் உதயமானது. அமைப்புக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் யு.அணில்குமார், பகுதிச் செயலாளர் மு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். கிளை தலைவராக சித்ரா, செயலாளராக சத்தியா,  பொருளாளராக ஜெய லஷ்மி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

குடிநீர் இணைப்புக்காக ரூ.3.11 கோடி ஒதுக்கீடு
சென்னை,ஜூன் 15- திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் இதுவரை தெரு குழாய் இணைப்புகள் மட்டுமே உள்ளது. முறை யாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட வில்லை. சிலர் சட்ட விரோத மாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை எடுத்து உள்ள னர். இந்த நிலையில் நாளொன்றுக்கு 8.02 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 7.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் பொது மக்களுக்கு கொடுக்கப்படு கிறது. இதனால் முறை இல்லாமல் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் குடிநீர் இணைப்பை முறைப்படு த்திக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 3 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் 9,000 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற உள்ளது. குடிநீர் இணைப்பு தேவைபடுவோர் ஜூலை மாதம் முதல் நகராட்சியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். குடியிருப்புகளுக்கு ரூ.5 ஆயிரம்முன்பணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.