tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னை, மதுரை  ஐஜி-க்கள் திடீர் பணியிட மாற்றம்

சென்னை,ஜன.31- பல்வேறு நிர்வாக காரணங்க ளுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள் பணியிட மாற்றம்  செய்யப்படுவது சமீப காலமாக அதி கரித்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு  முழுவதும் ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி யிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்,  சென்னை மண்ட லங்களுக்கு உட்பட்ட இரண்டு ஐபிஎஸ்  அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர் இதன்படி வடக்கு மண்டல  ஐஜியாக பணியாற்றி வந்த நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள  அட்டை மாயம்

சென்னை,ஜன.31- தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு பணி யாற்றி வருகிறார். அவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது.

அவருக்கு அடையாள அட்டை ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இந்த நிலையில் அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக அதை  தில்லியில் உள்ள ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப முடிவு செய்தார். அதற்கான அடை யாள அட்டையை தனது உதவியாளர்  சரவணன் என்பவர் மூலம் தபால்  மூலம் அனுப்புவதற்கு உத்தரவிட்ட தாக கூறப்படுகிறது.

அதன்படி சரவணன் தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டையை தபால் நிலையம் எடுத்துச்  சென்ற போது அங்கே தவறி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உதவியாளர் சரவணன் அடையாள அட்டை மாயமானது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புகாரை பெற்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 3 நாட்களுக்கு மழை
சென்னை,ஜன.31- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் வடமேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் அதன் பின்னர் மழை பெய்யவில்லை என்ப தும் வறண்ட வானிலை நிலவி வருகிறது  என்பதையும் பார்த்து வருகிறோம். அதி காலை மற்றும் இரவு நேரத்தில் பனி மூட்டம் மட்டுமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது திடீரென  ஏற்பட்ட கிழக்கு திசை காற்றின் வேறு பாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதி களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஜக கொடிக்  கம்பம் விழுந்து  ஒருவர் படுகாயம்

திருப்பத்தூர்,ஜன.31- திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் பாஜக வின் கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் படுகாயமடைந்தார்.  பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலையை வரவேற்பதற்காக வைக்கப் பட்டிருந்த 50 அடி உயர இரும்பு கொடிக்  கம்பம் விழுந்து கலீல் என்பவர் தலையில் காயம் ஏற்பட்டது.

அவருக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட் டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொடிக் கம்பம் விழுந்து படுகாய மடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அங்கு கூடியிருந்த  பாஜகவை சேர்ந்தவர்கள் ஒருவரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு  ரூ.80 குறைவு

சென்னை, ஜன.31- தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. செவ்வாய்க்கிழமை(ஜன.30) சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் புதன்கிழமை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு எவ்வித மாற்ற மின்றி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படு கிறது.