tamilnadu

செங்கல்பட்டு, சென்னை முக்கிய செய்திகள்

ஒலிம்பிக் ஜோதி வெடித்ததில் உயிரிழந்த மாணவருக்கு இழப்பீடு எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்

செங்கல்பட்டு, செப்.10-  செங்கல்பட்டு, ராம கிருஷ்ணா பள்ளியில் நடை பெற்ற விளையாட்டு போட்டி யின் போது,  ஒலிம்பிக் ஜோதி வெடித்ததில்  உயிரி ழந்த மாணவர்  குடும்பத்தி ற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய மாண வர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து மாணவர் சங்கத்தன் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி,  தலைவர் செந்த மிழன் ஆகியோர் விடுத்து ள்ள அறிக்கை வருமாறு:- காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு கலைவாணர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் விக்னேஷ் (16). இவர்  செங்கல்பட்டில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில் கடந்த 30ஆம் தேதி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த விளை யாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் சார்பில் விக்னேஷ்  ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றார். அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் விக்னேஷ் படு காயம் அடைந்து, சிகிச்சை பலனின்றி  ஞாயிறன்று (செப். 08) உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளியில் விசாரிக்க சென்றிருந்தோம். அப்போது பள்ளி நிர்வாகம் காவல்துறை யினரை வைத்து பள்ளியின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.  விளையாட்டு விழாவின் போது ஜோதி வெடித்தது குறித்து, விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்,  ஒருதலை பட்சமாகச் செயல்படும் செங்கல்பட்டு காவலர்கள் மீதும்  தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள் டிவி ஆப்ரேட்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு, செப்.10-  குரோம்பேட்டை நவமணி தெருவைச் சேர்ந்தவர் எத்திராஜ் (28). இவரது அண்ணன் ரமேஷ் பாபு. இவர்கள் இருவரும் குரோம்பேட்டை. நாகப்பா நகர் சி.எல்.சி. ஒர்க்ஸ் சாலையில் உள்ள தங்களது கேபிள் டிவி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி இரவு குரோம்பேட்டை ஆரோக்கியசாமி தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் (47) என்பவர் 5 பேருடன், எத்திராஜ் நடத்தி வரும் கேபிள் டிவி அலுவலகத்துக்கு வந்து ‘நாங்கள் தோல் கம்பெனிகளில் மாமூல் வாங்குவதை நீ தான் காவலர்களி டம் காட்டிக் கொடுக்கிறியா’ எனக் கூறி அரிவாளால் சரமாரி யாக வெட்டினர். இதில் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இவர்களை தடுக்கச் சென்ற அண்ணன் ரமேஷ் பாபுவுக்கும் வெட்டு விழுந்தது. இதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை காவலர்கள் ஸ்ரீதர் மற்றும் கூட்டாளி கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.  இந்த 6 பேர் மீதும் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி ராமநாதன் ஸ்ரீதருக்கு ஆயுள் தண்டணையும் ரூ.10 ஆயிரம் அபராத மும் விதிப்பதாக உத்தரவிட்டார். மேலும் மற்ற 5 பேரும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போதே இறந்து விட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

சேலையூர், மாதவரம் பகுதிகளில் இன்று மின் தடை

சென்னை, செப்.10-சென்னையில் புதனன்று (செப்.11) பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் 4 மணி வரை சேலை யூர், மாதவரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. சேலையூர் பகுதியில், திருவேஞ்சேரி, ­ஸ்ரீராம் நகர், ஜோதி நகர், சதீஷ் அவென்யூ, ராஜீவ்காந்தி இ.எஸ்.ஐ.சி நகர், காமராஜர் தெரு, அம்பேத்கர் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, ஈ.வி.ஆர் தெரு, அண்ணா தெரு, செல்வ ராஜ் தெரு, பஜனை கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, சத்திய மூர்த்தி நகர், அகரம் மெயின் ரோடு, எம்.ஜீ.ஆர் நகர், பாரத் நகர், பாவனி நகர், காமராஜ் நகர், ரங்கநாதன் நகர், சீனிவாசன் நகர், பாய் தோட்டம், பத்மாவதி நகர் பகுதி விரிவு, ரூபி ரீஜேன்சி, ரூபி கிராண்ட், அய்யனார் அவென்யூ ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதேபோல் மாதவரம் பகுதியில், அலதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆர் டவுன், கே.கே.ஆர் கார்டன், ரவி கார்டன், அலெக்ஸ் நகர், ஏ,பி.சி.டி காலனி, மேதா நகர், பத்மாவதி நகர், லோகம்மாள் நகர், சிட்டினேஸ்ட் பாஷ்சியம் நகர், சுப்பிரமணி நகர், டெலிபோன் காலனி தெற்கு எஸ். ஆர் சி மேதா லிட்டில் விங்ஸ். மாதவரம் பகுதி: லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆர் டவுன், கே.கே.ஆர் கார்டன், ரவி கார்டன், அலெக்ஸ் நகர், ஏ,பி.சி.டி காலனி, மேதா நகர், பத்மாவதி நகர், லோகம்மாள் நகர், சிட்டினேஸ்ட் பாஷ்சியம் நகர், சுப்பிரமணி நகர், ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.