சென்னை,செப்.23- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா காவல்துறையால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா நேற்று ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை நீலாங்கரை அருகே காவல்துறையால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை 7 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சீசிங் ராஜா மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.