tamilnadu

img

மொழித்திணிப்பில் மத்திய பாஜக அரசின் வெறிச்செயல்... அதிமுக முன்னாள் அமைச்சர் சாடல்

சென்னை:
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியில் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். முதல்வருக்கு புரியும்மொழியில் எழுதாமல் இந்தியில் எழுதியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்  அதிமுகமுன்னாள் அமைச்சர் ஒருவரே இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுகமுன்னாள் நிதியமைச்சர் பொன்னையன், “அமித்ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை. ஆனாலும் அவர் இந்தியில் கடிதம்எழுதுகிறார் என்றால் எப்படிப்பட்ட வெறிச்செயலில் தற்போதுள்ள மத்திய அரசு மொழி திணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அதுவே எடுத்துக்காட்டு” என்று கோபமாக கூறினார்.