tamilnadu

மனிதக்கரு வளர்ச்சி மையம் சென்னையில் தொடக்கம்

சென்னை, பிப். 17 ‘சென்னை கரு பராமரிப்பு மையம் (சென்னை ஃபீடல் கேர்)  சென்னை, அண்ணா நகரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.   இன்றைய சர்வதேச சந்தையின், அதி நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டு மேம்பட்ட சிகிச்சை அளிக்கும் வசதி இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மனிதக் கரு உருவாக்கத்தின் போதே, சில நேரங்களில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கும் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, தேவைப்பட்டால், தாயின் கர்ப்பபையில் கரு இருக்கும்போதே, அதற்கு தேவைப்படும் அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் இந்த மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் கரு வளர்ச்சி காலச் சிசிச்சை அளிப்பதில் 15 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றி, இத்துறையின் தலைசிறந்த மருத்துவராகச் சர்வதேச அளவில் புகழ் பெற்ற  கௌரிசங்கர் வழிகாட்டுதலில் இந்தமையம் செயல்படும்.    இந்த மையத்தை லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரு வளர்ச்சித்துறை பேராசிரியரும், அந்நாட்டின் கரு வளர்ச்சித்துறை மருத்துவ அறக்கட்டளையின் இயக்குனருமான பேரா. கைப்ரோஸ் நிக்கோலைடஸ் சென்னையில் உள்ள மெடிஸ்கேன் மையத்தின் இயக்குனரான மருத்துவர் சுரேஷ் சேஷாத்ரி இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.