tamilnadu

புழல் சிறையில் செல்போன் சிம்கார்டுகள், சார்ஜர் பறிமுதல்

சென்னை, ஜூன் 21- புழல் சிறை கழிவறையில் இருந்து 2 செல்போன், சிம்கார்டுகள், சார்ஜர் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 கைதிகளிடம் காவல் துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்கள் கொலை, கொள்ளை, வழிப் பறி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் கஞ்சா மற்றும் செல்போன் கள் நடமாட்டம் இருப்பதாக சிறைத் துறையினருக்கு புகார்கள் வருவதை யடுத்து சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சா  உள்ளிட்ட பொருட்களை அவ்வப்போது பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கைதிகள் அடைக்கப் பட்டுள்ள அறையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா  வழக்கில் கைது செய்யப்பட்ட பூந்த மல்லியை சேர்ந்த அப்பு (எ) உதயா, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட புழல் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ், திருட்டு வழக்கில் கைது செய்ய ப்பட்ட சூளைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் கழிவறையில்  செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். சிறையில் மூன்றடுக்கு பாதுகாப்பு இருந்தும் இவர்களுக்கு எப்படி செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட் கள் எப்படி கிடைக்கிறது என்பது மர்மமா கவே உள்ளது. எனவே உயர் அதிகாரி கள் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.