tamilnadu

img

கால்நடைகளுக்கான தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை: சிதம்பரத்தில் திறப்பு

கால்நடைகளுக்கான தீவனம் தயாரிக்கும்  தொழிற்சாலை: சிதம்பரத்தில் திறப்பு

சிதம்பரம், அக்.12 -  சிதம்பரம் வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்  கால்நடைகளுக்கான குச்சித் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்துவைத்து, தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையையும் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்ய செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்ற விழா வில் அமைச்சர் பேசுகையில், “சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமானது சிதம்பரம், புவன கிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாக்களை எல்லையாகக் கொண்டு,  இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளி டமிருந்து விவசாய விளைபொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்து வரு கிறது. இந்தச் சங்கத்தின் சொந்தமான உளுந்து பதனிடும் ஆலையிலிருந்து கிடைக்கப் பெறும் உபபொருளான உளுந்தம்பருப்புத் தவிட்டை மதிப்புகூட்டி விற்பனை செய்யும் பொருட்டு, கூட்டுறவு பதனிடும் சங்கங்களில் பெறப்படும் உபபொருட்களைப் பயன் படுத்தி, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி  நிதியின் கீழ் ரூ.19.53 லட்சம் மதிப்பீட்டில் கால்நடைக் குச்சித் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் உளுந்தம் பருப்புத் தவிடு, மக்காச்சோளம், அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, சமையல் உப்பு, புண்ணாக்கு, வெல்லப்பாகு ஆகிய உப பொருள்களைக் கொண்டு தீவனம் தயாரிக் கப்படுகிறது. 50 கிலோ கால்நடைக் குச்சித் தீவனம் தயாரிக்க ஆகும் செலவு ரூ.1,100 ஆகும். கால்நடைக் குச்சித் தீவனம் கிலோ ஒன்றின் விலை ரூ.25 என நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் பட்சத்தில், கிலோ ஒன்றுக்கு ரூ.3 வீதம் 50 கிலோ அளவுக்கு ரூ.150 லாபம் ஈட்ட இயலும். முன்பு அமைக்கப்பட்ட நவீன உளுந்து பதனிடும் ஆலை மூலம் தயாரிக்கப்படும் பருப்பு, தமிழகத்தில் உள்ள இதர கூட்டு றவு விற்பனைச் சங்கங்களுக்கும் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகச் சாலைகளுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கிடைக்கும் உபபொருள்களைக் கொண்டு அப்பளம், செக்கு நல்லெண்ணெய் மற்றும் செக்குக் கடலை எண்ணெய் தயாரித் துப் பொதுமக்களுக்குத் தரமான முறை யில் மிகக் குறைந்த விலையில் விற்கப்படு கிறது. கூட்டுறவு நிறுவனங்களில் தரமான பட்டாசுகள் தனியார் நிறுவனங்களின் விலையைவிட மிகக் குறைவான விலைக்கு  விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விற்கப்படும் பட்டாசுகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்” என்றார். கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி, துணைப் பதி வாளர் ரங்கநாதன், கூட்டுறவுச் சங்க மேலாண்மை இயக்குநர் சிவகுருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.