சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு சட்டப்பேரவையில், புதனன்று முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை வர வேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி உரையாற்றினார். அப் போது அவர் கூறியதாவது:
“இட ஒதுக்கீட்டை சரியாக அமல்படுத்த வேண்டும் என்று சொன்னால், சாதி வாரி கணக்கெடுப்பை நாம் துல்லியமாக நடத்த வேண்டியிருக்கிறது. இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடி யும் என்றாலும் கூட, பீகார் அரசு நடத்திய அந்த சாதி வாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட்டு அதை நிறுத்தியுள்ளது. அதை நாம் முன் உதாரணமாக கொள்ள வேண்டி யிருக்கிறது.
அந்த வகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பையும் சாதி வாரிக் கணக்கெடுப்பை யும் ஒன்றிய அரசு எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்நி லையில், மக்கள் தொகை மற்றும் சாதி வாரிக் கணக்கெடுப்பையும் இணைத்து ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்” என்றார்.
கு.செல்வப் பெருந்தகை (காங்.), நயி னார் நாகேந்திரன் (பாஜக), சின்னப்பா (மதிமுக), ம. சிந்தனைச் செல்வன் (விசிக), டி. இராமச்சந்திரன் (சிபிஐ), அருள் (பாமக), தி. வேல்முருகன் (தவாக), எம்.எச். ஜவாஹி ருல்லா (மமக), ஈ.ஆர். ஈஸ்வரன் (கொமதேக), பால் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.