tamilnadu

img

பாஜக நிர்வாகி வினோஜ் செல்வம் மீது வழக்கு பதிவு

சமூக வலை தளங்களில் வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் பாஜக இளைஞரணி தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பிசெல்வம். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக ஆட்சியில் கடந்த 200 நாட்களில் 130 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் இந்த தகவல் முற்றிலும் தவறானது.  2 மத பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையிலும், பொது அமைதியை கெடுக்கும் வகையில் இவரது பதிவு உள்ளதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து வினோஜ் பி செல்வம் மீது  கலகம் செய்ய தூண்டிவிடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல். உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 

;