மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரம் ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
புதுதில்லி, அக். 15 - தமிழக அரசு அனுப்பிய சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதா, கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அவருக்கு அனுப்பப்பட்டது. வழக்கமான நடைமுறையின்படி, மசோ தாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது விளக்கத்துக்காக திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால், அவர் குடியரசுத் தலை வருக்கு அனுப்பியதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளுநரின் இந்தச் செயல், அரசியல் சட்டப் பிரிவு 200-ஐ மீறுகிறது. மாநில அரசின் சட்டத் தீர்மானங்களை மாற்ற ஆளுந ருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஆளு நரின் நடவடிக்கையை செல்லாததாக உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது. குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய மசோதாவானது, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்கவும், பதவிநீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிப்பதாகும். மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலா ளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கும் அனுமதி அளிக்கிறது. கும்பகோணத்தை தலைமையக மாகக் கொண்டு கலைஞர் பெயரில் பல் கலைக்கழகத்திற்கான மசோதாவிற்கும் ஆளுநர் அனுமதி அளிக்காத நிலையில் அதற்கு எதிராகவும் ஏற்கெனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.