tamilnadu

img

ஆவின்பால் விலை உயர்வுக்கு  எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை:
ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆவின் பாலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு6 ரூபாய் உயர்த்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி தமிழக அரசின் ஆவின் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டது.ஆவின் நிறுவனத்தின் இந்த விலை உயர்வை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலின் விலை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் ஆவின்பாலை மட்டுமே நம்பியுள்ளனர்.  அரசியல் லாபத்துக்காக செலவிடும் பெருந்தொகையை மக்களின் தலையில் சுமத்தும் வகையில் இந்த விலையேற்றம் இருப்பதாகவும், எனவேஆவின் பாலின் சில்லறை விற்பனை விலையை உயர்த்தியஅறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று  கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேசாயி அடங்கிய அமர்வு முன்பு  வெள்ளியன்று விசாரணைக்குவந்தது. அப்போது போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி இந்தவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கை திரும்பப்பெற அனுமதி அளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.