tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

உடும்பு கடத்தல் : 6 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஜூன் 8- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு பகுதியில் உடும்பு ரத்தம், கறி, எண்ணெயில் உணவு தயாரித்தல், மசாஜ் செய்வது,மாந்திரீகம் செய்வதாக கூறி  ஏமாற்றுவது என சட்டவிரோதமான செயல்களில் சிலர் ஈடு பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு வாடிக்கையானவர்களாகவும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், சிக்காரி மேடுக்கு உடும்புகள் கடத்தி வரப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில்  இரண்டு பேருந்துகளை தடுத்து நிறுத்தி  சோதனை செய்தனர். இதில் 17 உடும்புகள் தஞ்சாவூரி லிருந்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அவற்றை மீட்டு  புதுக்கோட்டை மாவட்டம், குள்ளத்தூரை அடுத்த ரெக்கம் மாள் சத்திரம்,கார்த்திக், குந்தாரப்பள்ளி அருகே இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 6 பேர் மீது வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. பிடிபட்ட உடும்புகள் காப்பு காட்டில் விடப்பட்டன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்: விவோ அறிமுகம்

சென்னை, ஜூன் 8-   உலகளாவிய அளவில் சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டாக  திகழும் விவோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘எக்ஸ்போல்டு3 புரோ’ என்னும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

மாதர் சங்கம் புதிய கிளை உதயம்

ஆர்.கே.பேட்டை, ஜூன் 8- திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதிய அமைப்பு குழு உருவாக்கப்பட்டது. ஜி.லதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வித்யா வரவேற்றார். இதில் மாதர்  சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.மோகனா, மாவட்ட செயலா ளர் பி.பத்மா ஆகியோர் சிறப்புரையாற்றினர். வட்டார தலை வராக சுகுணா, வட்டார செயலாளராக வித்யா, பொருளா ளராக வனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

10 கிலோ  கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

விழுப்புரம், ஜூன் 8- விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தி சென்ற இரு வரை போலீசார் சனிக்கிழ மையன்று கைது செய்தனர்.

காவல்துறையினர் ரோந்துபணியின்போது இரண்டு நபர்கள் வைத்திருந்த கைப்பை யில்  சுமார் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில்  திருநெல்வேலி மாவட்டம், மானூர் அஞ்சல்,நஞ்சை குளத்தை  ராஜசுந்தர பாண்டி (வயது 27), மற்றொருவர்  தூத்துக் குடியை சேர்ந்த ரஞ்சித் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களிடமிருந்து பறி முதல் செய்யப்பட்ட கஞ்சா வின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் என தெரியவந்தது.