tamilnadu

img

கே.எஸ்.அழகிரி உள்பட 1000 பேர் மீது வழக்கு....

சென்னை:
கொரோனா விதியை மீறியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற காரணங்களுக்காக கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1000 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் 136-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் ஏர்கலப்பை விவசாயிகள் சங்கமம் திங்கட்கிழமை  மாலை வேலூர் மாங்காய் மண்டி அருகே நடந்தது.மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.