tamilnadu

img

அதிநவீன சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றம்

சென்னை, மே 17-ஓமன் நாட்டை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவருக்கு அதிநவீன சிகிச்சை மூலம் அண்மையில் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளதுசென்னை தரமணியில் செயல்பட்டுவரும் அப்பல்லோ மருத்துவமனை யின் முதல் புரோட்டான் தெரபி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்படி, அவரது இரண்டு கால்களில் உள்ள எலும்பு மஜ்ஜையில் இருந்த புற்றுநோய் கட்டியை கதிரியக்கம் வாயிலாக அப்பல்லோ மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.அந்த சிகிச்சைக்குத் தேவையான ரத்த ஸ்டெம் செல்களை அப்பெண்ணின் சகோதரரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்டதாக அப்பல்லொ மருத்துவர்கள் தெரிவித்தனர். பொதுவாக கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்போது, அதன் எதிர்விளைவாக கண்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கக் கூடும். ஆனால், அப்பல்லோவில் ஓமன் நாட்டு பெண்ணுக்கு மேற்கொள்ளப் பட்டது அத்தகைய பாதிப்பை ஏற்படுத்தாத நவீன சிகிச்சையாகும். புற்றுநோய் செல்களை துல்லியாக அழிக்கும் சிகிச்சையானது அமெரிக்கா, இத்தாலி நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.