கானல் நீரான பாஜக வெற்றி
‘சுற்றி சுற்றி வரும் மோடி
சென்னை, மார்ச் 5- “தமிழ்நாட்டில் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற கூட்டணி வலிமை பெற்றிருப்பதால், பிரதமர் மோடி அடிக் கடி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரு கிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந் தகை கூறியுள்ளார். அவர் கூறியது:
பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் கோபம் கொப்ப ளிக்கிறது, பதற்றம் அதிகரிக்கிறது. மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக பிரதமர் பதவியில் இருக்கிறோம் என்கிற குறைந்த பட்ச நாகரிகம் கூட இல்லாமல் அவதூறு குற் றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
திமுக அரசு வெள்ள மேலாண்மை யை சரிவரச் செய்யவில்லை, துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்று மோடி குற்றம் சாட்டியிருக்கிறார். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட்டனர். ஜனவரி 27-ஆம் தேதிக்குள் நிவாரணம் வழங் கப்படும் என்று உறுதி கூறினார். ஆனால் தமிழகத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி இதுவரை ஒரு சல்லிக் காசு கூட வழங்கவில்லை. மக்கள் விரோத மோடி ஆட்சி அகற்றப்பட்டு, மீண்டும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்தி கள் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை.
கிருஷ்ணசாமியும் பாஜகவுக்கு ‘டாடா’
சென்னை, மார்ச் 5- புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை அதிமுக தொகுதி பங்கீட்டு குழு வினர் செவ்வா யன்று (மார்ச் 5) சந்தித்து பேசினர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, “அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. மக்களவைத் தேர்தலில் அதி முகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி என்பது உறுதியாகியுள்ளது” என்று அறி வித்துள்ளார். இதன்மூலம், இவ்வளவு காலமும் கூடவே இருந்த டாக்டர் கிருஷ்ணசாமியும் பாஜகவுக்கு டாடா காட்டியுள்ளார்.