இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56ஐ ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஊழியர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. வேதாரண்யத்தில் துவங்கிய இக்குழுவினர் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஞான தம்பி, மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பிரச்சாரம் செய்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் டி .ரவிச்சந்திரன், செயலாளர் ஹரிகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்கத் தலைவர் புருஷோத்தமன் ,குடியிருப்போர் நல சங்கங்களின் பொதுச் செயலாளர் எம் .மருதவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.