tamilnadu

img

கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தல்...

கடப்பேரி பிரிவு மின்வாரிய ஊழியர்களை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 10) தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து செயற்பொறியாளர் கருப்பையா, காவல் உதவி ஆணையர் பழனியப்பன், மத்திய அமைப்பின் நிர்வாகிகள் சென்னை மண்டல செயலாளர் ஏ.முருகானந்தம், சென்னை தெற்கு கிளை-2ன் செயலாளர் பி.கௌதமன், நிர்வாகிகள் டில்லிகுமார், விஜயலட்சுமி, ஹெலன் தேவகிருபை உள்ளிட்டோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.