tamilnadu

img

சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்தூர் ரஹ்மான்

சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்தூர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் தொழில்நுட்ப தொழிற் பயிற்சி ஒத்துழைப்பு பிரிவு (ஐஐபிசி) சார்பில்  கடந்த வாரம் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. மொத்தம் 2700 மாணவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள பெயர்களை பதிவு செய்திருந்தனர்.4600 பேர் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 628 மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கப்பட்டன.  இந்த முகாமை பயிற்சி நிலைய பதிவாளர் டாக்டர் ஏ.ஆசாத் தொடங்கிவைத்தார். துணைவேந்தர் டான் ஸ்ரீ தத்தே சகுல் ஹமீது பின் அபுபக்கர்,துணைபதிவாளர் ராஜா உசேன், வேலைவாய்ப்பு பயிற்சி பிரிவு இயக்குநர் இயக்குநர் கே. கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.