பிராட்வே பன்நோக்கு வணிக மைய கட்டிடம் 2027 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டம்
சென்னையில் எப்போதும் பரப் பரப்பாக காணப்படும் பிராட்வே பகு தியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உதவியுடன் பன் நோக்கு வணிக வளாகம் கட்டப் படவுள்ளது. இந்த வளாக கட்டுமான பணி இன்னும் 5 மாதங்களில் தொடங்க உள்ளது. இப்பணிகளை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த கட்டிடம் 27 மாடி களை கொண்டிருக்கும். இதற்காக தற்போது செயல்பட்டு வரும் பிராட்வே பேருந்து நிலையம் விரை வில் ராயபுரத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது. இந்த வணிக வளாக கட்டுமான பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன (சிஎம்ஆர்எல்) துணை நிறுவமான சென்னை மெட்ரோ அசெட் மேனே ஜ்மென்ட் லிமிடெட் நிறுவனம் மேற் கொள்ள உள்ளது. 4.42 ஏக்கர் பரப்பளவு கொண்டு இந்த இடத்தில், 9 மாடிகள் கொண்ட பன்நோக்கு வணிக வளாகக் கட்டிடம் மற்றும் ஒரு ‘குறளகம்’ கட்டிடம், பேருந்து முனையம், வணிக வளாகம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கான இணைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஒன்பது மாடி களைக் கொண்ட கட்டிடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்துடன் இரண்டு அடித்தளங் கள் இருக்கும். இந்த கட்டிடத்தில் ரயில் நிலையங்களில் உள்ளதை போன்று பயணிகளின் பொருட் களை பாதுகாப்பாக வைத்திருக்க அறைகள். காத்திருக்கும் இடம், ஓய்வறைகள், டிக்கெட் வழங்கும் பகுதி, உணவகங்கள் மற்றும் பிற வசதிகள் இருக்கும். கட்டிடத்தின் அருகில் உள்ள சுரங்கப்பாதைகள் உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் குறளகம் பேருந்து முனையம் ஆகியவற்றுடன் இணைக்கும். தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் ஆட்டோக்கள் நிறுத்துமிடங்கள், பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்கள், மற்றும் பேருந்துகளில் ஏறும் தளங்களும் இருக்கும். இரண்டாவது தளம் மற்றும் அதற்கு மேல் உள்ள தளங்கள் அலுவலக மற்றும் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். “இந்த வணிக வளாகம், பேருந்தில் ஒரு இடத்தில் இருந்து வந்து மற்றொரு இடத் திற்கு பேருந்து அல்லது மெட்ரோ, அல்லது புறநகர் மின்சார ரயில்க ளுக்கு மற்றும் குறளகம் வணிக வளாகத்திற்கு மாறி செல்லும் மைய இடமாகவும் திகழும். ஒவ்வொரு மட்டத்திலும் மின் தூக்கி, எஸ்கலே ட்டர்கள் இருக்கும்,” என்று ஒரு அதி காரி கூறினார். பல்நோக்கு கட்டிடத்திற்குப் அருகில், ஒரு பத்து மாடிக் கட்டிடம் கட்டப்படும். அதில் குறளகம் இருக்கும். மேலும் அதனுடன் கூடு தல் வணிக வளாகத்திற்கான இட மும் இருக்கும். இந்த திட்டத்திற்கு மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த புள்ளிகள் வந்துள்ளன. இரண்டு வாரங்களில் ஒப்பந் தத்தை முடிப்போம், ”என்று அந்த அதிகாரி கூறினார். கட்டுமான பணிக் கான ஒப்பந்தம் ஏப்ரலில் வழங்க ப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போதுள்ள அனைத்து கட்டுமானப் பகுதி களையும் இடித்து, பயன்பாடுகளை மாற்றி, அடித்தளம் அமைத்து, கட்டுமானப் பணிகளைத் தொடங்க ஒப்பந்ததாரருக்கு சுமார் இரண்டு மாதங்கள் தேவைப்படும். சுற்றுச் சூழல் அனுமதி தவிர, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் இந்திய விமான நிலை யங்கள் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுகடை வியாபாரிகள் கோரிக்கை இந்த வணிக வளாகம் கட்டி முடித்தவுடன் சிறு வணிகர்களுக்கு நியாயமான வாடகையில் கடை களை ஒதுக்கவேண்டும் என்றும் தற்போதுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மாநகராட்சி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.