tamilnadu

img

சென்னையில் ஜனவரி 6ல் புத்தக கண்காட்சி துவக்கம்

சென்னையில் ஜனவரி 6ம் தேதி முதல் புத்தக கண்காட்சி துவங்க உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா சென்னையில் வரும் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி  தொடங்கி வைக்கிறார். வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனவும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  புத்தக காட்சியில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;