tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனிப்படை அமைப்பு
சென்னை,பிப்.8- சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வந்த வெடி குண்டு மிரட்டல் புரளி என்பதால் குற்ற வாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சாந்தோம், அண்ணா  நகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 13 தனியார் பள்ளி களுக்கு இ.மெயில் மூலம் வெடி குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் ஆசிரி யர்கள், மாணவர்கள் ஆகியோர் கடும்  அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து, காவல்துறையினர் மோப்ப நாயுடன்  தீவிர சோதனை நடத்தி னர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை. மேலும் வெடிகுண்டு நிபுணர் கள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது, “வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றோம். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த அந்த நபர் யார் என்பதை கண்டறியும் பணியில் சைபர் கிரைம் காவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருவ தால் மின்னஞ்சல் முகவரியில் வந்த விவரங்களை தெரிவிக்க இயலாது” என்றார்.

புரளியை கிளப்புவதற்கு அனுப்பப்பட்ட மிரட்டலாக இருக்கிறது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டும் பாஜக: கி.வீரமணி கண்டனம்
சென்னை,பிப்.8- விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு மிரட்டல் விடுக்கிறது என திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை மிரட்டி ஜன நாயகத்தை படுகொலை செய்கின்ற னர். இந்தியா கூட்டணியில் சருகு  விழுந்தால் அதை பெரிதாக்குகிறார்கள்; ஆனால் தே.ஜ. கூட்டணியில் ஒற்று மையே. இந்தியா கூட்டணி தலைவர் களை நம்பிய கூட்டணி அல்ல மக்களை நம்பிய கூட்டணி என்றும் அவர் தெரி வித்தார்.

கல்குவாரியில் மண் சரிவு : 2 பேர் உயிரிழப்பு
மயிலம்,பிப்.8- விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் கல்குவாரி யில் வெடி வைக்க பள்ளம் தோண்டிய  போது மண் சரிவு ஏற்பட்டது. அந்த மண்  சரிவில் 2 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் 2 தொழிலாளர்களை மீட்கும் பணி நடை பெற்றது. இறுதியில் 2 பேரும் சடலமாக  மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் இறையனூர் சேர்ந்த அய்யனார் (26)  மற்றும் சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (30) என்பது தெரியவந்தது.தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

இதனிடையே குவாரியில் பணிபுரி பவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் உற வினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தேர்தல்: தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரிகள்
சென்னை,பிப்.8- மக்களவை தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி  செய்வதில் ஆர்வம் காட்டி வருகின் றன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி யாக சங்கர்லால் குமாவத்தும், இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கூடுதல் தேர்தல் அதி காரிகளை நியமனம் செய்ய வேண்டும்  என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியிருந்தார்.