tamilnadu

img

59 குற்ற வழக்குகள் கொண்ட பாஜக நிர்வாகியின் மனு தள்ளுபடி

சென்னை, ஏப்.1- பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வி.வெங்கடேஷ் (49). இவர், செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய இவர்  போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசார ணைக்கு வந்தபோது, வெங்க டேஷ் மீது 10 குற்ற வழக்குகள், ஆந்திராவில் 49 வழக்குகள் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி ஆனந்த்  வெங்கடேஷ், ‘இதுபோல குற்ற வாளிகளுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கினால், அது  நீதித்துறை மீதான நம்பிக்கை யை இழக்க வைக்கும்’ என்று  கூறி பாஜக மாநிலச் செயலாளர்  வி. வெங்கடேஷின் மனுவைத்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.