வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செல்கிறார். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையே 12 லட்சம்தான். அண்ணாமலை சொல்வதுபோல் இரண்டு கோடியே 24 லட்சம் பேருக்கு அரசு வேலை தர வேண்டும். கடல்-லேயே இல்லையாம் என்பது போல ஒரு வடிவேல் நகைச்சுவை காட்சி வரும். அதுபோல 2 கோடி பேருக்கு அரசு வேலை எங்கு இருக்கிறது? இது ஒரு பித்தலாட்ட வேலை. கோயில் கட்டி ராமரை கும்பிட்டால் மூன்று வேளைக்கும் சோறு கிடைத்துவிடுமா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.