“பாஜகவிடம் இந்த நாட்டு மக்களிடம் கொள்ளை அடித்தப் பணம் குவிந்து கிடக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழல் செய்த பணம் நரேந்திர மோடியிடம் மட்டுமின்றி, அண்ணாமலை, செந்தில்நாதன் வரை வந்துள்ளது. பாஜக ஒரு 500 ரூபாய் கட்டை சாதாரணமாக உதரிக்காட்டும் அளவிற்குப் பணம் வைத்திருக்கிறார்கள் என்றால், அது கண்டிப்பாக ஊழல் பணம் தான்” என்று கரூர் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ஜோதிமணி கூறியுள்ளார்.