சென்னை, ஜூன் 13- சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் தேர்தல் பணிமனை திறக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், பாரதிய ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார். ராஜா அண்ணாமலை புரம் 6ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த வர் சோபனா (55). இவ ருக்கு அண்ணாநகர் எச் பிளாக் பகுதியில் சொந்த மாக ஒரு வீடு உள்ளது.
இந்த வீட்டில் மீனாட்சி (38) என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். இந்நிலை யில் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் பிரசாரம் நடை பெற்றபோது மீனாட்சி, அந்த வீட்டை தனது வீடு என்று திருமங்கலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி மருதுபாண்டி என்பவரு டன் சேர்ந்து போலி ஆவ ணங்களை தயாரித்து பாஜக தேர்தல் பணிமனை திறக்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார்.
அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஆவணங்களை சரிபார்த்தது. அப்போது ஆவணங்கள் அனைத்தும் போலி என்பதை தேர்தல் ஆணையம் கண்டறிந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தது. இதற்கிடையே தனது வீட்டின்பேரில் போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கப்பட்டதை அறிந்த சோபனாவும், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் திரு மங்கலம் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்த னர். இது தொடர்பாக மீனாட்சியை கடந்த ஏப்ரல் 10 அன்று கைது செய்த னர். இந்நிலையில் தலை மறைவாக இருந்த மருது பாண்டியை காவல் துறை யினர் புதன்கிழமை கைது செய்தனர்.