சென்னை, ஏப். 24- சென்னை சாலைகளில் வாகனங் களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூ லிக்க சென்னை ஒருங்கிணைந்த பெரு நகர போக்குவரத்து ஆணையம் திட்ட மிட்டுள்ளதால், சாலை ஆக்கிரமிப்பு குறைய வாய்ப்புள்ளது. இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, வேன், பேருந்து என தமிழ்நாட்டில் சுமார் 4 கோடி வாகனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டு களில் தமிழ்நாட்டில் 19 விழுக்காடாக மக்கள் தொகை பெருக்கம் இருந்தா லும், வாகனங்களின் பெருக்கம் சுமார் 35 விழுக்காடாக இருப்பதாக, அண்மை யில் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின் றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக னங்களில் சுமார் 25 விழுக்காடு வாக னங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தான் இயக்கப்படுகின்றன. கட்டுக்கடங்காத வாகன பெருக் கத்தால் சென்னையின் பிரதான சாலை கள் அனைத்திலும் வாகனங்கள் நிரம்பி வழிவதை பார்க்க முடிகிறது.
மறு புறம் நடைபாதை தெரியாத அளவுக்கு ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாக னங்களால் பாதசாரிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் அதிகம். ‘நோ பார்க்கிங்’ என காவல் துறை யினர் பெயர் பலகை வைத்த இடங்களி லும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குடியிருப்பு பகுதிகளை பொறுத்த வரை தங்களது வீட்டிற்குள் வாகனம் நிறுத்த இடம் இருந்தாலும், அதை பயன் படுத்தாமல் சாலையில் நிறுத்தும் பழக்கம் அதிகமாக உள்ளது.
இவற்று க்கெல்லாம் முடிவு கட்ட சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்கு வரத்து ஆணையம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, சென்னையில் சாலை களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம் என்ற ரீதியில் ஆய்வு நடத்தி, அதில் ஒரு முடி வும் எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை அண்ணா நகரில் 5 சதுர கி.மீ. சுற்றள வுக்கு, சுமார் 23 கி.மீ. நீள சாலை களில் சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை செயல்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, சென்னை மாநகராட்சியில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த நிதியாண்டிலேயே வாகன கட்டண வசூலை தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் சாலை ஆக்கிர மிப்புகள் முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கலாம்.