‘காலைப் பொழுது’ என்ற பாடலில் குருவியும், காக்கையும் பேசிக் கொள்வது போலவும், குருவி அப்பொழுது கற்றறிந்த காக்கையே, பேசுக நீ என்பதாகவும் காக்கை உடனே பேசுவதாகவும் பாரதி ஒரு கவிதை புனைந்திருக்கிறார்.
“ அப்போது காக்கை, அருமையுள்ள தோழர்களே செப்புவேன் கேளீர், சில நாளாக் காக்கையுள்ளே நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டறியீ ரோ?
சார்ந்து நின்ற கூட்டமங்கு சாலையின் மேற்கண்டீரே?
மற்றந்தக் கூட்டத்து மன்னவனை காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்; ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான் வாழியவன் எங்கள் வருத்த மெலாம் போக்கிவிட்டான்
சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை; துன்பமில்லை.
போற்றற் குரியான் புதுமன்னன் காணிரோ?” என்று காக்கை மூலம் லெனினைப் புகழ்கிறார் பாரதி.
ரஷ்யப் புரட்சி முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற ஏழாம் நாள் பாரதி பாடிய பாடல் என்று இதனைக் கூறுவர்.