புதுச்சேரி, ஆக.28- கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 31 முதல் ஒருவார காலம் உள்ளூர் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறி வித்துள்ளார். புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்ப டுத்தும் வகையில் தொற்று பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்ட 32 பகுதிகளில் வரும் 31ஆம் தேதி முதல் செப்.6ஆம் தேதி வரை உள்ளூர் பொதுமுடக்கம் அறி விக்கப்பட்டுள்ளது. அதன்படி, சண்முகபுரம், கோவிந்த சாலை வைதிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை செயல்படவும், அதேபோல் அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றி லும் தடைசெய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள் மட்டும் செயல்படும். உள்ளூர் பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண், அரசுச் செயலர் பங்கஜ் குமார், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் ஒழுங்கு) பிரதிக்ஷா, சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர். மோகன் குமார், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் சுகாதாரத் துறை காவல் துறை வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சிதுறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளூர் பொதுமுடக்கம் அமல்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய மருத்துவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோ சிக்கப்பட்டது.