சென்னையில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை அல்லது ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பேனர் வைப்பதற்கு 2 தினங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தடையின்மைச் சான்று பெற வேண்டும். இது தொடர்பான விதிமுறைகளை டிஜிட்டல் டிரிண்டிங் சங்கத்தினர் மற்றும் அரசியல்கட்சியினர் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பேனர் வைக்க புதிதாக 10விதிகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பேனர் வைக்க அனுமதி கட்டணமாக ரூ.200 வரைவோலை செலுத்த வேண்டும். உரிய அனுமதி பெறாமல் பேனர் வைக்கும் பட்சத்தில் ஓராண்டு சிறை அல்லது ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.