சென்னை, ஆக. 23 – சட்ட விரோதமாக இயக் கப்படும் பைக், டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படு கின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அனுமதிச் சான்று, பொது வில்லை பெற்று, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத் தில் சேவையளித்து வரு கின்றன.
இந்த நிலையில், எவ்வித கட்டண வரம்பும் இன்றி, சட்டவிரோதமாக இயக்கப் படும் ரேபிடோ போன்ற பைக் டாக்சிகளை தடுக்க வலி யுறுத்தி வெள்ளியன்று (ஆக.23) திருவான்மியூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம் இந்த போரா ட்டத்தை நடத்தியது.
இந்த போராட்டத்தில் பேசியவர்கள், “தனிநபர் வாகனங்கள் வணிக நோக்க த்தோடு இயக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளி யிட்டுள்ளது. தனியார் வாக னங்களை பொது பயன் பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என உயர்நீதி மன்றமும் தீர்ப்பளித்துள் ளது. இவற்றையெல்லாம் மீறி தொடர்ந்து பைக் டாக்சிகள் பல்வேறு பெயர்க ளில் இயக்கப்படுகிறது. இத னால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படுகிறது. எனவே, சட்ட விரோதமாக இயங்கும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்” என்று வலி யுறுத்தினர்.
சங்கத்தின் வேளச்சேரி கிழக்கு பகுதித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ் ணன், சிபிஎம் பகுதிச் செய லாளர் எஸ்.முகமதுரஃபி, சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜெ.முகமது அனீபா, பொதுச்செயலாளர் உமா பதி, பொருளாளர் ஏ.பக்கிரி, பகுதிச் செயலாளர் கோபால், பொருளாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
இதனைத் தொடர்ந்து திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிவேலிடம் தலை வர்கள் மனு அளித்து பேசி னர்.