tamilnadu

img

எழுத்தாளர் அருந்ததிராய் நூலை பாடத்திலிருந்து நீக்கியதற்கு தமுஎகச கண்டனம்...

சென்னை:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப் படிப்பு பாடத்திட்டத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்” என்கின்ற நூலை நீக்கியிருப்பது பல்கலைக்கழகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும்அதை அனுமதிக்க முடியாது என்றும்மீண்டும் பாடத்திட்டத்தில் அந்நூலைசேர்க்க வேண்டும் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் நடத்திய கண்டனக் கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது. 

எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்” என்கின்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலமுதுநிலை பட்டப்படிப்பு பாடத்திட்டத் தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்பான ஏபிவிபிஎன்கிற மாணவர் அமைப்பு கொடுத்த புகாரின்பேரில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணி தன்னிச்சையாக அந்தப் பாடத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதற்கு  கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள்,  எழுத்தாளர் கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

எழுத்தாளர் அருந்ததிராய் நூலைபாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க வலியுறுத்தும் தீர்மானத்தை மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலாமுன்மொழிந்து பேசினார். முனைவர் வே.வசுந்திதேவி, கனிமொழி எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர், மு.நாகராசன், மதுக்கூர் இராமலிங்கம், ஆதவன் தீட்சண்யா, வீ.மாரியப்பன் உள்பட400-க்கும் மேற்பட்டோர் கண்டன கூட்டத்தில் கலந்துகொண்டனர். நாறும்பூநாதன் நன்றி தெரிவித்தார்.