சென்னை, ஜூன் 30- வட மாநிலங்களில் முஸ்லிம் கள் மீது, ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டத்தினர் திட்டமிட்டு நடத்தி வரும், தாக்குதலைக் கண்டித்து, ஜூலை 9-ஆம் தேதி தமிழகம் முழு வதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நலக்குழு வின் மாநிலத் தலைவர் எஸ். நூர் முகமது, மாநிலப் பொதுச்செயலா ளர் எம். ராமகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப் பிட்டிருப்பதாவது: மூன்றாவது முறையாக ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜக வட இந்தியாவில் பரவ லாக முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உயிர் களையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த திட்ட மிட்ட வன்முறைகளை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன் மையாக கண்டிக்கிறது.
பத்தாண்டு கால பாஜக அரசின் சிறுபான்மை விரோத செயல்களை எதிர்த்துத் தான் இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர். நாடாளு மன்ற ஜனநாயகத்தை, மதச்சார் பின்மையை, மக்கள் ஒற்றுமை யை, சிறுபான்மையினர், பெண் கள், தலித்கள் மீதான இந்துத்துவா சக்திகளின் தாக்குதலைக் கண்டித் துத் தான் இந்திய மக்கள் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வாக்க ளித்தனர்.
எதையும் செய்யும் பலத்தோடு ஆட்சிப் பொறுப்பை மூன்றாவது முறை அடைவோம் என்று கனவு கண்டவர்களுக்கு தக்க பாடத்தை இந்திய மக்கள் வழங்கினார்கள். ஆட்சி அமைப்பதற்கான சொந்த பலமில்லாமல் பிற கட்சி களோடு இணைந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கிற மோடி அரசாங்கம் மக்களின் தீர்ப்பில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தயாராக இல்லை. மாறாக மிக தீவிரமாக வகுப்பு வாதத்தை கிளறிவிட்டு, சிறு பான்மை மக்கள்- குறிப்பாக முஸ் லிம்கள் மீது வன்தாக்குதலை தொடுப்பதன் மூலமாக மக்களைப் பிரித்து பெரும்பான்மை மக்களை மதவெறியர்களாக்கி தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று மூர்க் கத்தனமான செயலில் ஈடுபட்டு வருவதை சமீபத்திய நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன.
ஜனநாயக எண்ணம் கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ளாத இந்த செயல்களுக்கு எதிராக தனது கண்டனங்களை தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு பதிவு செய்கிறது. தாங்கள் ஆட்சி செய்கிற மாநி லங்களில், ஒன்றிய ஆட்சிப் பொறுப் பின் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு வட மாநிலங்களின் பல் வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் எருமை மாடுகளை வளர்ப்புக்காக வாங்கி வந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அலிகாரில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி வீடுகள் இடிக்கப்பட் டுள்ளன. மத்தியப் பிரதேச மாநி லம் மண்டலாவில் குளிர்சாதன பெட்டியில் மாட்டுக் கறி இருந்த தாக சொல்லி 11 வீடுகளை புல்டோ சர் வைத்து இடித்துள்ளனர். லக்னோ அக்பர் நகரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசம் நாகன் பகுதியில் முஸ் லிம் கடைகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன.
தலைநகர் தில்லியில் சங்கம் விகார் பகுதி யில் இறைச்சிக்காக மாடு வெட் டப்பட்டதாக சொல்லித் தாக்கு தலை துவக்கி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் முஸ்லிம் களுக்கு வீடு கொடுக்கக் கூடாது என இந்துத்துவா சக்திகள் அதிகாரி களுக்கு நெருக்கடி கொடுத்து வீடு வழங்க மறுக்கிறார்கள். ஒரு பக்கம் படுகொலைகளும், இன் னொரு பக்கம் குடியிருப்புகளை இடிப்பதும் என்ற பாஜக, ஆர்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகளின் செயல் கள் பெரும் கண்டனத்திற்குரியது.
ஒவ்வொரு ஆண்டும் இது போல நூற்றுக்கணக்கான சிறு பான்மையினர் படுகொலை செய் யப்படுவதும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் புல்டோசர்களால் இடித்து நொறுக்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்த கொடுஞ்செயல்களை கண்டித்து ஜூலை 9 அன்று தமிழ் நாடு முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங் கள் நடத்துவது என தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு முடிவு செய்துள்ளது. மதச்சார்பின்மை மீது, மக்கள் ஒற்றுமை மீது, ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் இந்த கண்டன இயக்கத்தில் கலந்து கொண்டு இந்துத்துவா சக்திக ளுக்கு எதிராக கண்டனம் முழங்க அணி திரள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிட்டுள்ளனர்.