சென்னை,டிச.16- சென்னை மெரினா கடற்கரையில், 27 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்கு படுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்து வது தொடர்பான வழக்கு கள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் திங்களன்று (டிச.16) மீண்டும் விசாரணை க்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யில், சென்னை மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 962 கடைகள் உள்ளதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது. அங்கு 900 கடை களுக்கு மட்டும் அனுமதி வழங்க இருப்பதாகவும், அதற்காக, 27.4 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடை கள் அமைத்துக் கொடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டு ள்ளது. வாகன நிறுத்தத்தை பொறுத்தவரை, 457 கார்கள், 2 ஆயிரத்து 271 இருசக்கர வாகனங்கள், 80 பேருந்துகளை நிறுத்தும் வகையில் ராணி மேரி கல்லூரி, கலங்கரை விளக்கம் உள்ளிட்டவை அருகில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மெரினாவை சுத்தப்படு த்த 175 துப்புரவு பணி யாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படவுள்ள தாகவும், 6 இடங்களில் அதி நவீன கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த உள்ளதாகவும் மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தின் அருகில் மீன் வியாபாரி களுக்கு 66 லட்ச ரூபாய் செல வில் 300 மீன் விற்பனை கடைகள் அமைக்கப்படுவ தாகவும் அதில் கூறப்பட்டு ள்ளது. இதை பதிவு செய்த நீதி பதிகள், உணவு பாதுகாப்பு விதிகளை மீறி செயல்படு பவர்கள், உணவு விற்பனைக்கான தரச் சான்று பெறாதவர்கள் மெரினாவில் கடைகள் நடத்த அனு மதிக்கவே கூடாது என எச்சரித்தனர். லூப் சாலையில் நடை பாதை, சைக்கிள் செல்ல பாதை உள்ளிட்ட, மெரினா கடற்கரையை அழகுபடுத்த மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க காலஅவகாசம் வழங்கி, விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.