சென்னை, ஜூன் 18- முககவசம், கைகழுவ தண்ணீர், சோப்பு கேட்டு வியாழனன்று (ஜூன் 18) களப்பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டனர். கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்க ளுக்கு வாரத்திற்கு 2 முககவசம், மூன்று வாரத்திற்கு ஒரு ஜோடி கையுறை மட்டுமே தரப்படுகிறது. கோட்ட அலுவலகங்களில் கை கழுவ தண்ணீர், சோப்பு தருவ தில்லை. எனவே, தினசரி கையுறை, முக்கவசம் வழங்க வேண்டும். கைகழுவ வசதியை ஏற்படுத்த வேண்டும். மண்டலம் 1 மற்றும் 3ல் தொழி லாளர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மண்டலம் 13 மற்றும் 15ல் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும். வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் தனி மனித இடைவெளியோடு பயணிக்க போதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.
அரசு அறிவித்தபடி, தொற்று பாதித்த தொழிலாளர்கள் அனை வருக்கும் 2 லட்சம் ரூபாய் கரு ணைத்தொகை வழங்க வேண்டும், தொற்று பாதித்து இறந்த ஜெ.நந்த குமார், அறிநாயகி, எம்.திலக்குமார், ஜெ.சங்கர் ஆகிய நான்கு தொழி லாளர்களுக்கு அரசு அறிவித்த 50 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும், நிரந்தரமற்று உள்ள என்எம்ஆர், என்யுஎல்எம், துப்புரவு, மலோரியா, சாலை, பூங்கா, அம்மா உணவகம், மின்பணியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி நாளொன்றுக்கு 624 ரூபாய் கூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி செங் கொடி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. காவல்துறையினரின் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொதுச் செய லாளர் பி.சீனிவாசுலு, பொருளாளர் பா.ராஜேந்திரன், துணைப்பொதுச் செயலாளர்கள் டி.ராஜன், கே.தேவ ராஜ் ஆகியோர் பேசினர்.