tamilnadu

img

தொழிற்சங்கத்தின் வரலாறாக வாழ்ந்தவர் கே.வி: முத்தரசன் புகழாரம்

சென்னை:
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர், தொழிற் சங்க இயக்கத்தின் முன்னோடி கே. வைத்தியநாதன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை:-

அனைவராலும் கே.வி. என தோழமையோடு அழைக்கப்படும் மூத்த தலைவர் கே.வைத்தியநாதன் (95) காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.திருவாரூரில் பிறந்த தோழர் கே.வைத்தியநாதன் பள்ளிப்படிப்பு காலத்தில் தொடங்கிய பொது வாழ்க்கைப் பயணத்தை இறுதி மூச்சு வரை நெறி சார்ந்த முறையில் மேற்கொண்டவர்.சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவதில் முனைப்பு காட்டியவர். புதுவை மக்கள் தலைவர் வ சுப்பையா
வின் மாறாத அன்பைப் பெற்றவர். தொழிற் சங்க இயக்கத்தின் வரலாறாக வாழ்ந்த தோழர் கே.வைத்தியநாதன் மறைவு ஈடு செய்ய இயலாதது.மறைந்த தோழர் கே.வைத்தியநாதன் நினைவுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வீர வணக்கம் செலுத்துகிறது.அன்னாரை பிரிந்து வாடும் சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

;