சென்னை,டிச.11- ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி யான ராஜசேகரை துபாய் சிறை யில் இருந்து அழைத்து வர பொரு ளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் துபாய் செல்ல முடிவு செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 விழுக்காடு வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முத லீட்டாளர்களிடம் இருந்து ரூ. 2,438 கோடி மோசடி செய்த தாக புகார் எழுந்தது. இது தொடர் பான புகார்களின் அடிப் படையில் பொருளாதார குற்றப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர் கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இதன் இயக்குநர்கள் ராஜசே கர் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அண்மையில் அறிவிக்கப்பட்டனர். மேலும் இவர்கள் இருவரும் துபாயில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்ய, ‘இன்டர்போல்’ எனும் சர்வதேச காவல்துறையினர் உதவியை நாடி, அவர்களுக்கு ‘லுக் அவுட்’ (தேடப்படும் குற்றவாளி) நோட்டீஸ் மற்றும் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து ஆருத்ரா வழக்கில் துபாயில் தலைமறை வாக இருந்த ராஜசேகரை துபாய் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ராஜசேகரை துபாய் நீதிமன்ற அனுமதியுடன் சென்னை அழைத்து வர பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல முடிவு செய்துள்ள னர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பொரு ளாதார குற்றப்பிரிவு போலீ சாரால் ஏற்கெனவே துபாய் நீதிமன்றத்தில் சமர்க்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.