கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விருதாளரை தேர்வு செய்ய பேராசிரியர் அருணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருது பெறும் விருதாளரை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அருணன் தலைமையிலான குழுவில் ஜென்ராம், சமஸ், தராசு ஷியாம், முனைவர் பர்வீன் சுல்தானா, அரங்க மல்லியா ஆகிய 5 பேர் கொண்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குழுவின் உறுப்பினர் செயலராக மக்கள் தொடர்பு துறையின் கூடுதல் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.