ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதி, மருத்துவமனையில் அனுமதி
சென்னை, டிச. 17-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிஎஸ்பி மாநில தலை வராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்குத் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் காவல்துறையினரின் என்கவுன்டரில் உயிரி ழந்தார். மீதி அனைவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்ந வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளைச் சிறையில் இருக்கும் த.செல்வராஜூக்கு (50) சிறுநீரகத்தில் அதிக வலி ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை அனு மதிக்கப்பட்டார்.
அங்கு அவர், மருத்துவ மனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையொட்டி, அந்த வார்டு பகுதியில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
தங்கத்தின் விலை உயர்வு
சென்னை,டிச.17
சென்னையில் செவ்வா யன்று தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 200-க்கும் கிராமுக்கு10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 150-க்கும் விற்பனை செய்யப்படு கிறது.