tamilnadu

ஆம்ஸ்ட்ராங் படுகொலை இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை

சென்னை, ஆக. 20 - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு  தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவி யிடம் தனிப்படை காவல்துறை யினர் விசாரணை நடத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.  ஆம்ஸ்ட்ராங். கடந்த ஜூலை  5 அன்று சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இந்த கொலை வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடமும் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி  சம்பவம் செந்திலின் கூட்டாளி யான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில்- முன்னதாக அவருக்கு நெல்சனின் மனைவி அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.