tamilnadu

img

எஸ்.முரளி தாஸுக்கு பணி நிறைவு பாராட்டு

ராணிப்பேட்டை, ஜூன்  30 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார் எஸ். முரளி தாஸ். அவர்  சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார்.

சத்துணவு அமைப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதையொட்டி பாராட்டு விழா அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.டி. தினகரன் தலைமை யில் ஞாயிறன்று (ஜூன். 30) ஆற்காடு அரசி னர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.  இதில் சிபிஎம் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி,  மாவட்ட குழு உறுப்பினர்கள் டி. சந்திரன், எல்.சி. மணி, எஸ். செல்வம், பி. ரகுபதி, எஸ். கிட்டு, கே. சேகர், நெடுஞ்சாலை துறை மாநில செயலாளர் பெரு மாள், சத்துணவு ஊழியர் சங்கம் முன்னாள் மாநில துணைத் தலைவர் துரை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஆர். சீனிவாசன், அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலை வர் எஸ். ஜோசப் கென்னடி, முன்னாள் மாவட்டத் தலைவர் ஆ.து. ஜெயகோபி, சத்துணவு ஊழியர் சங்கம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.ராஜசேகரன், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலை வர் அருணகிரி, ஆற்காடு சம்பத், ராதா கிருஷ்ணன், ஆற்காடு தாலுகா குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்கம், விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மலை வாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் சங்கம் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசினர். இறுதியாக எஸ். முரளி தாஸ் ஏற்புரை வழங்கினார்.