சென்னை, ஜன.13- புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்து கள் இயக்கப்படுகின்றன.
இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இங்கு போதிய வசதிகள் செய்யப்பட வில்லை என்று குற்றச் சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சனிக்கிழமையன்று (ஜன.13) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதனிடையே, நில நிர்வாக ஆணையர் இணை இயக்குநர் பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள் ளார். கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு சிக்கல் எதுவும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா? வசதி கள் முறையாக உள்ளதா? என்பது உள்ளிட்ட பணி களை அவர் மேற்கொள் வார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.