ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
சென்னை,ஜன.11- அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன் படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்தார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகா தேவன் மற்றும் முகம்மது ஷபீக் ஆகி யோர் அடங்கிய அமர்வு உத்தரவிட் டுள்ளது. மேலும் அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை தொடரும் என நீதிபதிகள் தெரிவித் துள்ளனர்.
2 ஆண்டு பி.எட். படிப்பு அனுமதியில்லை
சென்னை,ஜன.11- அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட். படிப்பு நடத்த கல்லூரி களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று என்.சி.டி.இ தெரிவித்துள்ளது.
4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவித்துள்ளது.
சிறப்பு கல்வி உட்பட 2023-24 கல்வி யாண்டில் இருந்து பி.எட். 2 ஆண்டு களில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த் தப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கை -2020-ன்படி, தேசிய ஆசிரியர் கவுன்சில் புதிய பயிற்சி திட்டம் அமல்படுத்தும் முயற்சி நடக்கிறது. 4 ஆண்டு பி.எட். படிப்பை நடத்த விரும்பும் கல்லூரிகள், பல்கலை.கள் போர்ட்டல் திறக்கப்பட்டதும் விண்ணப் பிக்கலாம்.
மின்சார குளிர்சாதன பேருந்துகளுக்கு டெண்டர் வெளியீடு
சென்னை,ஜன.11- கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழ லுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களில் போக்குவரத்து பயன்பாட்டிற்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பேருந்து வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டி ருந்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக இப்போது 100 குளிர்சாதன மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
மின்சார பேருந்துகளின் சார்ஜிங் தீர்வு மற்றும் டிப்போ மேம் பாடு பணிகளுக்கும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரிக் ஏ.சி. பேருந்து கள் வழங்கும் நிறுவனம், சார்ஜிங் மையம் மற்றும் சர்வீஸ் மையத்தையும் அமைத்து தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறுவதற்கு தகுதி யான ஆவணங்களுடன் ஆன்லைனில் ஜன. 11 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
டோக்கன் இல்லாதவர்கள் நாளை முதல் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம்
சென்னை,ஜன.11- டோக்கன் பெற்றவர்களுக்கு முழுமையாக வழங்கிய பிறகு, மற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரொக்கத் தொகை பெற சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.
அதன்படி ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், வருமான வரி செலுத்து வோர் போன்ற பிரிவினரைத் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு , ரூ.1000 பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பரிசுத் தொகுப்பு புதன்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பிறகு, அனைத்து அரிசி அட்டை தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங் கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. டோக்கன் பெறாதவர்கள் வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தங்களுக்குரிய நியாய விலைக் கடைகளுக்குச் சென்று ரூ.1,000 ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது
சென்னை,ஜன.11- தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை (ஜன.11) சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்படு கிறது.