சென்னை,நவ.27- பொறியியல் கல்லூரிகளில் எவ்வ ளவு மாணவர்களை வேண்டுமானா லும் சேர்த்துக் கொள்ள (ஏஐசிடிஇ)அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அனு மதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஏஐசிடிஇ-ன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வரு கின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது
இந்த நிலையில் ஒரு பாடப் பிரிவில் 240 மாணவர்களை சேர்க்க வேண்டும் என தற்போதுள்ள நிபந்த னையை தளர்த்த ஏஐசிடிஇ முடிவு எடுத்துள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் ஒரு பாடப்பிரிவில் சேர்த்து கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளின் போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றும் ஆய்வு முடி வின் அடிப்படையில் மாணவர் சேர்க் கைக்கான அனுமதி வழங்கும் என்றும் ஏஐசிடிஇ அந்த அறிவிப்பில் குறிப் பிட்டுள்ளது.
ஏஐசிடிஇயின் புதிய சலுகை சிறு மற்றும் நடுத்தர பொறியியல் கல்லூரி களுக்கு சிக்கலாக அமையும். அளவுக்கு அதிகமாக மாணவர் சேர்க்கை நடைபெறும் போது தரமான கல்வி கேள்விக்குறியாகிவிடும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வரும் நிலையில், ஏஐசிடிஇ-யின் இந்த அறிவிப்பு பொறியியல் மாணவர்க ளுக்கு வரப்பிரசாதம் ஆகவும், சிறு கல்லூரிகளுக்கு பேரிடியாகும் அமைந் துள்ளது. எனினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள் ளனர்.