ஸ்மார்ட் மீட்டர் எதிர்ப்பு மக்கள் சந்திப்பு இயக்கம்
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சென்னை வடக்கு சார்பில் பெரம்பூரில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் மாநில துணைப்பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார், மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.சாலட், மாநில துணை தலைவர் டி.சந்திரசேகர், கிளைச் செயலாளர் மதனகோபால், பொருளாளர் ஜி.சத்யமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.