tamilnadu

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 70 லட்சத்தில் ஆய்வகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  ரூ. 70 லட்சத்தில் ஆய்வகம்

சிதம்பரம், ஜூன் 3- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பொறி யியல் வளாகத்தில் மாணவர்களுக்கு சுரங்கவியல் பட்டய படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.  இதில் 60 இடங்களில் 30 இடங்கள் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கும், மீதி 30 இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் வழங்கப்படுகிறது. இதுவரை சுரங்க பட்டய படிப்பு பயின்ற 220 மாணவர்கள் என்எல்சி யில் 2 வருட தொழிற்பயற்சி முடித்துள்ள னர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் சர்வேயர், ஓவர்மேன், சர்த்தார் போன்ற பதவிகளில் நிரந்தர அடிப்படையில் என்எல்சியில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், என்எல்சி நிர்வாகம் சார்பில் சுரங்கவியல் கட்டிடத்தில் ரூ. 50 லட்சம் செலவில் புதிதாக  இயக்கவியல் ஆய்வகம், ரூ. 20 லட்சம் செலவில் சூரிய சக்தி விளக்குகளுடன் சுரங்கவியல் கட்டிடத்துக்கான இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாண வர்களின்  பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 39 தொழில்துறை பயிற்சியாளர்களுக்கான ஆணை வழங்கும் விழா சுரங்கவியல் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுரங்கவியல் பட்டயப் படிப்பின்  இயக்குநர் சரவணன் வரவேற்றார். இதில் பங்கேற்ற என்எல்சி தலைவர் பிரசன்னகுமார்  ஆய்வகம் மற்றும் இணைப்பு சாலையை துவக்கி வைத்தார்.  இதில் என்எல்சியின் தலைமை பொது மேலாளர் ஸ்ரீனிவாச பாபு உள்ளிட்ட என்எல்சி அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்ட னர். நிகழ்வினை பல்கலைக்கழக பொறி யில் புல முனைவர் சிவராஜ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்  பழனிவேல் ராஜா நன்றி கூறினார்.