வெயிலுக்கும் திமுக - அதிமுக தான் காரணம் அண்ணாமலை கண்டுபிடிப்பு
“கோவை ஒரு காலத்தில் மிகவும் குளுமையாக இருந்தது. தற் போது இரண்டு முதல் மூன்று டிகிரி கள் வரை வெயில் அதிகரித்து விட்டது. மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பய ணிக்கவே முடியாத நிலை இருக்கிறது. மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே வர முடியாத அளவுக்கு தூசி படர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் திராவிட அரசுகள் தான்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை கண்டுபிடித்துள்ளார்.
தேவயானியை கலெக்டர் ஆக்கியது போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன்!
“நான் போட்டி யிட்டாலும் சரி என் மனைவி போட்டியிட்டாலும் சரி, எல்லாமே ஒன்றுதான். ராதிகா வுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது, எனக்கு வாய்ப்பு கொடுத்தது போல்தான். ஏனென் றால் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்கிறார்கள். அந்த பெண் சக்தியை மோடி சிறப்பாக கவனித்து மகளிருக்கு அதிக வாய்ப்புகளை அளித்து வரு கிறார். மகளிருக்கு வாய்ப்புக் கொடுக் கும் போது சூர்யவம்சம் படத்தில் எப்படி நான் படிக்காமல் தேவயானியை கலெக்டர் ஆக்கினேனோ அது போல் ராதிகாவை வெற்றி பெற வைக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று நடிகர் சரத்குமார் திருப்பரங்குன்றத்தில் பேட்டி அளித்துள்ளார்.
3 டிகிரி செல்சியஸ் வரைவெப்பம் அதிகரிக்கும்
சென்னை, மார்ச் 24- “மார்ச் 24 முதல் மார்ச் 30 வரை தமி ழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் வறண்ட வானிலை நிலவக் கூடும். மார்ச் 28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை அடுத்த ஐந்து நாட்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும்” என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.