சென்னை, ஆக. 31 - ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்து வந்த ஆண்ட்ரூயூல் நிறுவன ஊழி யர்கள் திங்களன்று (ஆக.31) பணிக்கு திரும்பினர். மத்திய அரசுக்கு சொந்தமான ஆண்ட்ரூயூல் அண்டு கம்பெனி லிட். என்ற பொதுத்துறை நிறுவனம் பழைய மகாபலி புரம் சாலை கந்தஞ்சாவடியில் செயல்பட்டு வருகிறது. உயர் மின்னழுத்த மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) தயாரிக்கப்ப டும் இந்த தொழிற்சாலையில் 72 தொழிலா ளர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பகுதி தொழி லாளர்கள் டிரான்ஸ்பார்மர் அண்டு சுவிட்ச்கி யர் எம்பிளாயீஸ் யூனியனில் (சிஐடியு) உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு 1-4-2017 முதல் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடை பெற்றும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. மத்திய தொழிலாளர் நல துணை ஆணையர் ஆலோ சனைகளையும் நிர்வாகம் செயல்படுத்த வில்லை. இதனையடுத்து 2019 ஆக. 19 அன்று தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
இந்த போராட்டம் ஓராண் டுக்கும் மேலாக நீடித்தது. இதற்கிடையில் தொமுச சங்கம் 11 தொழி லாளர்களின் ஆதரவோடு 18(1) ஒப்பந்தம் செய்தது. இதனை சிஐடியு ஏற்காததால் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதன்பின்னர் சமரச அதிகாரி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்பட வில்லை. இதனையடுத்து தொழிற்தகராறு சட்டம் 12 (4)ன்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும், வேலைக்கு செல்லவும் ஆக.24 அன்று நடைபெற்ற சிஐடியு பொதுக்குழு முடி வெடுத்து நிர்வாகத்திற்கு தெரிவித்தது. ஆனால், ஒவ்வொரு சங்க உறுப்பின ரும் உறுதி மொழி பத்திரம் (அன்டர்டேக்கிங்) தர வேண்டும் என்று நிர்வாகம் வலியுறுத்தி யது. இந்த அடிமை சாசனம் எழுதி தரும் முறையை சிஐடியு ஏற்கவில்லை. இதனை யடுத்து ஆக.29 அன்று சங்கத் தலைவர் எஸ். அப்பனு, பொதுச் செயலாளர் கருணாகரன், இணைச்செயலாளர் கார்த்திகேயன் ஆகி யோர் உயர் அதிகாரிகளான மோகன், புக ழேந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஷ அதன்பிறகு, உறுதி மொழி பத்திரம் கொடுக்கா மல் ஆக.31 முதல் தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.